
Kadhai Osai - Tamil Audiobooks
1.6 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்- சொல்லாமல் விட்ட சுவடிகள்
இது இந்த மகாபாரதக் கதையின் ஆறாவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். மரணப் படுக்கையில் கிடக்கும் மூத்த மந்திரி ஜனார்த்தனரை சந்திக்க தேவவிரதன் அவரது இல்லத்துக்கு அடிக்கடி செல்கிறான். அவர் மூலம் ஆட்சி, நிர்வாகம், எல்லைப் புற நிலைமை, யார் யார் நம்பத்தகுந்தவர்கள் எனப் பல சேதிகளையும் அறிந்துகொள்கிறான். மந்திரியை விரைவில் மரணம் தழுவுகிறது. அவருக்குப் பின் யார் முதலமைச்சர்? அந்த முடிவெடுப்பதில் தேவவிரதனின் பங்கு என்ன? இப்படி வியாச பாரதத்தில் 'சொல்லாமல் விட்ட சுவடி'களை இந்த வாரம் நீங்கள் தீபிகாவின் குரலில் வாசித்துக் கேட்கலாம். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். #mahabaratam #vyasamaharshi #tamilaudiobook #mythology #deepikaarun






