
Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்
புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்
புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்விஞ்ஞானியாகவும் பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில்வாகன மென்பொருள் துறையில் உயர் பதவியில் இருந்தார்.இப்போது முன் கூட்டியே பணி ஒய்வு பெற்று இலக்கியம்மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சிறப்பாக கர்நானாடக இசையயை வயலினில் வாசித்து பல நிகழ்ச்சிகளைத் தந்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 1997ஆம் ஆண்டு கல்கி சிறுகதைப் போட்டியில் சுஜாதாவால் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2016ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகனால் புதிய படைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியான அவரது படைப்புகள் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன; 2023 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியிலும் தேர்வாகினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மாயக்குரல் மற்றும் ஜீரோ டிகிரி வெளியிட்ட வாச்சியம்நாவல் அவரது படைப்புலகின் முக்கிய மைல்கற்களாகும். மனித உறவுகள், காலம், வரலாறு, விதி ஆகியவற்றை ஆழமாக ஆராயும் அவரது எழுத்து, சமகாலத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.


